திங்கள், மார்ச் 05, 2018

அணுவிலிருந்து அறிவியந்திரம் வரை - பகுதி 4: போதையில் ஒரு பொத்தான்!!

கடந்த அத்தியாயத்தில் போதையில் இருக்கும் p-n வகை குறைக்கடத்திகள் எப்படி ஒருவழிப் பாதை மின்னோட்டத்தை சாத்தியப் படுத்துகிறது என்று பார்த்தோம். கடந்த அத்தியாயத்தில் பார்த்த சிதைவுப்பகுதியில் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், n-பக்கம் இருக்கும் சிதைவுப்பகுதியினால் ஓட்டைகளை கடத்த முடியாது. அதேபோல p-பக்கம் இருக்கும் சிதைவுப்பகுதியினால் எலக்ட்ராங்களை கடத்த முடியாது.

இப்போது இதே குறைக்கடத்திகளை n-p-n  என்ற வரிசையில் ஒட்டிவைத்து ஒரு திரிதடையத்தை உருவாக்கினால்?  ஒரு மாற்றத்திற்கு இந்த இடையில் இருக்கும் p- வகை குறைக்கடத்தியை மட்டும் சற்று சிறியதாக வைத்துக்கொண்டால் எப்படி இருக்கும்? இந்த திரிதடையத்திற்கு ஆங்கிலத்தில் ட்ரான்ஸிஸ்டர்(transistor) என்று பெயர்.



மேல உள்ள படம் திரிதடையத்தில் இருக்கும் சிதைவுப்பகுதியை காட்டுகிறது. இப்போது இடது புறம் இருக்கும் n-வகை குறைகடத்தியை நெகட்டிவ் கரண்ட்டுக்கும், வலது புறம் இருக்கும் n-வகை குறைகடத்தியை பாசிட்டிவ் கரண்ட்டுக்கும் கொடுத்தால் என்னவாகும்?

இடது புறம் அளவுக்கு அதிகமான எலெக்ட்ரான்கள் உள்ளே புகுந்து கொண்டு இருக்கிறது. இடது புறம் n-p எல்லையில் இருக்கும் n-புறமாக இருக்கும் சிதைவுப்பகுதிக்கு எலக்ட்ரான்கள் செலுத்தப்படும் போது என்ன நடக்கிறது? இம்முறை ஒன்று சேர ஓட்டைகளை தருவதற்கு p-வகை கடத்திக்கு பாசிட்டிவ் கரண்ட் கொடுக்கப்படவில்லை. ஆகவே p-புறமாக இருக்கும் சிதைவுப்பகுதி சிதையாமல் இருக்கிறது. p-புறம் இருக்கும் சிதைவுப்பகுதி ஓட்டைகளை மட்டும் கடத்துவதால், n-பக்கமாக இருக்கும் எலக்ட்ரான்கள் p-பக்கமாக செல்ல முடிவதில்லை.

இடதுபுறம் np-எல்லையில், n-பக்கமாக சிதைவுப்பகுதி சிதைந்து விட்டது. வலது புற pn- எல்லையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? வலது பக்கமாக இருக்கும் பாசிட்டிவ் சார்ஜ், ஓட்டைகளை உள்ளே செலுத்துகிறது.   சோம்பேறித்தனத்திற்கு ஏங்கிக்கொண்டிருக்கும் பாஸ்பரஸ் அணுக்கள் தங்கள் எலக்ட்ரான்களை, இந்த ஓட்டைகளுக்கு தாரை வார்க்கின்றன. ஆக n-புறமாக இருக்கும் சிதைவுப்பகுதி வளர்ந்து விடுகிறது.



மேலே கொடுக்கப்பட்ட படம், மின்தடை ஏற்படுத்தப்பட்ட ஒரு npn-குறைக்கடத்திகளின் சிதைவுப்பகுதி அமைப்பு! இப்போது ஏற்பட்டிருக்கும் மின்தடையை எப்படிப் போக்குவது? எப்படி இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் எதிர் மின்னிகளை கடத்துவது?

இடையில் இருக்கும் p-வகை குறைக்கடத்திக்கு கொஞ்சம் பாசிட்டிவ் கரண்ட் கொடுத்தால் என்னவாகும்? முதலில் p-குறைக்கடத்திக்கு இரண்டு புறமும் இருக்கும் சிதைவுப்பகுதி காணாமல் போகும். அடுத்து, இடது புறம் வந்து விழுந்து கொண்டு இருக்கும் எலக்ட்ரான்கள் p-பகுதியில் வந்து விழும் ப்ரோட்டான்களோடு கலந்து np- பகுதியில் மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இடதுபுறம் இருக்கும் n-பகுதி p-பகுதியை விட பெரியது. ஆகவே p - பகுதி கொடுக்கும் ப்ரோட்டான்களை விட n-பகுதியில் இருந்து வரும் எலெக்ட்ரான்கள் அதிகமாக இருக்கிறது. இப்பொழுது இடது புறமாக இருக்கும் சிதைவுப்பகுதி முற்றாக சிதைந்து விட்டது. இடது புறத்தில் இருந்து வந்த எலக்ட்ரான்கள், தங்களைத் தடுக்க சிதைவுப்பகுதி இல்லாததால், p- பகுதியையும் நிரப்புகிறது. p-பகுதி நிரம்பியவுடன் எலக்ட்ராங்கள் வேறு எங்கே செல்ல முடியும்? வலதுபுறம் இருக்கும் n-பகுதிக்கு சென்று மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது.



மேலே இருக்கும் படம் p-குறைக்கடத்திக்கு பாசிட்டிவ் கரண்ட் கொடுத்தவுடன் எப்படி இடப்புறம் இருந்து வலப்புறமாக மின்னோட்டம் ஏற்படுகிறது என்பதை விவரிக்கிறது. p-குறைக்கடத்திக்கு பாசிட்டிவ் கரண்ட் கொடுத்தால் மின்னோட்டம் ஏற்ப்படுகிறது, இல்லையேல் மின்தடை ஏற்படுகிறது. ஒரு விளக்கிற்கான மின் சுவிட்ச், ஆப் செய்யும் போது மின்தடையை ஏற்படுத்தி விளக்கை அணைக்கிறது. பொத்தானை அழுத்தியவுடன் மின்னோட்டம் ஏற்பட்டு விளக்கு எரிகிறது. இங்கே pக்கு கொடுக்கப்படும் கரண்டானது மின்னோட்டம் ஏற்பட வழிவகை செய்யும் பொத்தானைப் போன்றது. ஒரு கணிப்பொறி என்பது இதுபோன்ற போதையில் இருக்கும் கோடிக்கணக்கான பொத்தான்களால் ஆனது.

ஐபோனில் இருக்கும் மையச்செயலி(CPU) ஒரு சென்டிமீட்டர் நீளமும் ஒரு சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.  அதாவது அதன் நீள அகலங்கள் உங்கள் விரலின் நீளத்தில் பத்தில் ஒரு பங்கு. எத்தனை சிரியதல்லவா? அத்தனை சிறிய மையச்செயலியில்(CPU) மொத்தம் எத்தனை திரிதடையங்கள்? கிட்டதட்ட இருநூறு கோடி!!

வெள்ளி, பிப்ரவரி 23, 2018

அணுவிலிருந்து அறிவியந்திரம் வரை - பகுதி 4 : போதை தரும் ஒருவழிப் பாதை!!

N-டைப் செமி கண்டக்டர்கள் எலெக்ட்ரானை  கடத்துவதும், P-டைப் செமி கண்டக்டர்கள் ஓட்டைகளை கடத்துவதுமே அந்த அணுக்களின் சோம்பறித்தனத்திற்கு அடித்தளமாய் இருக்கிறது என்பதை சென்ற தொடரில் பார்த்தோம். ஒரு p -வகை குறை கடத்தியையும், n-வகை குறை கடத்தியையும் ஓட்ட வைத்தால் என்னவாகும். இரண்டு கடத்திகளில் இருக்கும் அணுக்களின் நோக்கம் என்ன? சோம்பேறித்தனம்! அதற்க்கு தடையாய் இருப்பது? p-வகை அணுக்களுக்கு ஒரு எலெக்ட்ரான் பற்றவில்லை. N - வகை அணுக்களுக்கு ஒரு எலெக்ட்ரான் அதிகமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒன்று தேவை, மற்றவருக்கு ஒன்றை இழக்க வேண்டி இருக்கிறது. இருவரையும் ஒட்டவைத்த உடன் என்ன நடக்கிறது, இழக்கத் துடிப்பவர் அடையத் துடிப்பவருக்கு வாரி வழங்குகிறார்.

அந்த ஒட்டிய கோட்டிற்கு அருகில் இருக்கும் எலக்ட்ரான்களும் ஓட்டைகளும் ஒன்றிணைந்து விடுகின்றன. கோட்டுக்கு அருகில் இருக்கும் அணுக்கள் சோம்பேறியாகிவிட்டால் கடத்தல் நின்று விடுகிறது. அதனால் கோட்டில் இருந்து விலகிச் செல்ல செல்ல, அங்கே இருக்கும் அணுக்கள் தங்களுக்கு வேண்டிய எலெக்ட்ரான்களை அடைவதற்க்கோ அல்லது இழப்பதற்க்கோ, இந்த சோம்பேறிகளை தாண்டிச் செல்ல வேண்டி இருப்பதால், ஒட்டிய கோட்டில் இருந்து விலகி இருக்கும் அணுக்களுக்கு தங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியாமல் தவிக்கின்றன. ஆக இந்த கோட்டை சுற்றி மின் தடுப்பு ஆகி விட்டது.



மேலே இருக்கும் படத்தில் ஒட்டிய கோட்டுக்கு இரண்டு புறமும் இருக்கும் இடைவெளிதான் சோம்பேறிகளால் உருவான வேலி. இந்த வேலிக்கு பெயர் சிதைவுப் பகுதி அல்லது depletion region. இந்தப் பெயருக்கு காரணம், இந்த வேலிக்கு  அருகில் இருக்கும் ஊர் சுற்றும் துரைகள் எல்லாம் சிதைந்து போய்விட்டனரே!!

இப்போது இதில் வெளியே இருந்து மின் அழுத்தம், அதாவது பாசிட்டிவ் கரண்ட் ஓட்டைகள் நிறைந்த p-வகை அரைக்கடத்திக்கு கொடுக்கப்படும் போது, தேவைக்கு அதிகமான ஓட்டைகள் உருவாகி, செல்ல வேறு இடம் இல்லாமல் சிதைவுப்பகுதியை நோக்கி ஓட்டைகள் நகருகின்றன. அதே போல n-வகை அரைக்கடத்திக்கு நெகடிவ் கரண்ட் கொடுக்கும் பொழுது அதிகமான எலெக்ட்ரான்கள் உருவாகி செல்ல வேறு இடம் இல்லாமல் சிதைவுப்பகுதியை நோக்கி செல்கின்றன. இருபுறமும் எலெக்ட்ரான்களும், ஓட்டைகளும் சிந்துவதால், இந்த சிதைவுப் பகுதி மெல்ல மெல்ல சுருங்கி, காணமால் போய், எலக்ட்ராங்களும் ஓட்டைகளும் சந்திக்க வழி வகுக்கிறது.

மேலே இருக்கும் படத்தில் சரியான திசையில் செலுத்திய மின்சாரம், சிதைவுப் பகுதியை சிதைத்து மின்னோட்டம் நடைபெறுகிறது.

இதுவே நெகடிவ் கரண்ட்டை p -வகை அரைக்கடத்திக்கும், பாசிட்டிவ் கரண்டை n-வகை அரைக்கடைத்திக்கும் மாற்றிக்கொடுக்கும் போது என்ன நடக்கிறது? எலெக்ட்ராங்கள் p -வகை அரைக்கடத்திக்கு சென்று அங்கே இருக்கும் ஓட்டைகளை எல்லாம் சிதைக்கிறது. ஓட்டைகள் எல்லாம் n - வகை அரைக்கடத்திக்கு சென்று எலெக்ட்ரோன்களை எல்லாம் சிதைக்கிறது. கடந்த முறை சுருங்கிய சிதைவுப்பகுதி, இம்முறை பெரிதாகிறது. இம்முறை சிதைவுப் பகுதியைத் தாண்டி, எலெக்ட்ராங்களும் ஓட்டைகளும் சந்திக்க முடியாமல் மின்தடை ஏற்படுகிறது.

மேலே இருக்கும்  படம், தவறான திசையில் கொடுக்கப்பட்ட மின்சாரம் சிதைவுப் பகுதியை

ஆக இங்கே, மின்சாரம் ஒரு வழியில் மட்டுமே செல்லும், பாசிடிவையும் நெகட்டிவையும் மாற்றிக் கொடுத்தால், மின்தடை ஏற்பட்டு மின்சாரம் கடத்தப்படுவதில்லை.

ஒரு சாதாரண உலோகக்கடத்தி பாசிடிவையும் நெகட்டிவையும் எந்தப்பக்கம் கொடுத்தாலும் கடத்திச் செல்லும். ஆனால், இந்த போதை ஏற்றிய இரண்டு நண்பர்களும் இணைந்த PN-டையோடானது, ஒரே ஒரு வழிப்பாதையில் மட்டுமே மின்சாரத்தை கடத்துகிறது.

இந்த ஒற்றை வழிப்பாதை கடத்திதான் மின்ணணு உலகில் நடந்த மிகப்பெரிய புரட்சியாகும். இது ஏற்ப்படுத்திய புரட்சியை வரும் பதிவுகளில்  பார்ப்போம்.


வியாழன், பிப்ரவரி 22, 2018

அணுவிலிருந்து அறிவியந்திரம் வரை - பகுதி 3 : அணுக்களின் கடத்தலும் போதையும்!

சரிவர கவனிக்காத சில குழந்தைகள் எப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருப்பார்களோ, அதே போலத்தான் சில எலெக்ட்ரான்களும் ஊர் சுற்றுபவர்களாக மாறி விடுகின்றன. சென்ற முறை இரண்டு அணுப்பிணைப்புக்களைப் பார்த்தோம், இம்முறை உலோகப் பிணைப்பை பார்க்கலாம்.

  உலோகங்களில் உள்ள அணு மையமானது பெற்றோர் போன்றது, அருகில் இருக்கும் எலக்ட்ரான்களை அனுசரணையாக வைத்துக்கொண்டு, தொலைவில் உள்ளவற்றை கண்டுகொள்ளவதில்லை. கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் எலெக்ட்ரோன்கள் ஊர் சுற்றுபவர்களாக சுற்றித்திருந்து கொண்டு இருக்கும். இப்படி ஊர் சுற்றும்  எலெக்ட்ரான்கள், வெளிப்புற அழுத்தங்களினால் கடத்தலில் ஈடுபடுகிறது. இவை இரண்டைக் கடத்துகிறது, ஒன்று மின்சாரம் மற்றது வெப்பம். நம்முடையுது கவனம் மின்சாரத்தில். வெளியில் இருந்து எலெக்ட்ராங்கள் உள்ளே அனுப்பப்படும் பொழுது, உள்ளே சுற்றிக்கொண்டு இருக்கும்  எலெக்ட்ரோன்கள் வெளியேற்றப் படுகிறார்கள். இப்படி வெளியாகும் ஊரு சுற்றுபவர்களின் அளவுதான் மின்னோட்டம் அல்லது கரண்ட். இப்படி வெளியில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்திற்குப் பெயர்தான் மின்னழுத்தம் அல்லது வோல்ட்டேஜ். மின்னோட்டம் ஏற்பட போதிய மின்னழுத்தம் தேவை. அனால் மின்னழுத்தம் போதிய அளவு இல்லாவிட்டால் மின்னோட்டம் இல்லை. அணுக்கருவின் அனுசரணை எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவு எலக்ட்ரான்களின் ஊர் சுற்றுதலுக்கு தடை ஏற்படுகிறது. அதாவது மின்கடத்துவது சிரமமாகிறது. இந்த அணுக்கருவின் அனுசரணைதான் மின்தடை அல்லது resistance  என்று சொல்லப்படுகிறது.

இந்த கடத்தும் மூலக்கூறுகள், கடத்தா மூலக்கூறுகளை மத்தியில் மற்றொன்று அரை குறை கடத்திகள்(செமிகண்டக்டர்). பொதுவாக இவை கடத்தும் வேலைக்கு செல்வதில்லை. ஆனால் வேறு சில அணுக்களை கலந்து போதை(doping) ஏற்றி விட்டாலோ, அல்லது வெளிப்புற அழுத்தம் அதிகமானாலோ கடத்தல்  வேலை ஆரம்பமாகிவிடும். இந்த போதை ஏற்றும் முறையில் நடக்கும் கடத்தல் தான், இன்றைய கணிப்பொறிகளிலும்  ஏனைய மின்னணு சாதனங்களிலும் விரவிக்கிரடக்கிறது.

சிலிக்கான் பிரிசித்தி பெற்ற அரை குறைக் கடத்தி. இந்த சிலிகானுக்கு மொத்தம் நான்கு கடைசி வட்ட எலக்ட்ரான்கள். ஒரு சிலிக்கான் நான்கு மற்ற சிலிக்கான் அணுக்களோடு சேர்ந்து கோவலன்ட் இணைப்பில் ஈடுபட்டு, மந்த நிலையை அடைகிறது. இந்த நிலையில் கடத்துவதற்கு ஊர் சுற்றும் எலக்ட்ரான்கள் இல்லை. ஆகவே வெளிச்சுற்றில் ஐந்து எலக்ட்ரான்களை கொண்ட பாஸ்பரஸ் அணுக்களை சிறிது கலந்து விட்டால், நான்கு சிலிக்கான் அணுக்களோடு சேர்ந்து, கோவலன்ட் நிலையில் இந்த பாஸ்பரஸ் ஒன்பது எலக்ட்ரான்களை தனது வெளிச் சுற்றில் கொள்கிறது. பாஸ்பரஸ் அணு மந்த நிலையை அடைய, ஒரு எலெக்ட்ரானை இழக்க வேண்டி இருக்கிறது. ஆகவே, அந்த இழக்க வேண்டிய எலெக்ட்ரானை ஊர் சுற்ற அனுப்பி விடுகிறது. மின் அழுத்தம் கொடுத்தவுடன் போதை ஏற்றப்பட்ட அரைகுறை கடத்தி கடத்த ஆரம்பிக்கறது. இதுதான், N - டைப் செமி கண்டக்டர் எனப்படுகிறது.

இதுவே பாஸ்பரஸுக்கு பதில் போரானைக் கலந்தால் என்னவாகும்? போரான் மூன்று எலக்ட்ரான்களை இறுதிச் சுற்றில் வைத்துள்ளது. ஆகவே அது நான்கு சிலிக்கான் அணுக்களோடு சேரும் போது, வெளிச்சுற்றில் ஏழு எலக்ட்ரான் மட்டுமே உள்ளது.  வெளிச்சுற்றில் ஏழு மட்டும் இருந்தால், போரான் மந்த நிலை எய்த இன்னும் ஒரு எலெக்ட்ரான் தேவைப்படுகிறது. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரானை ஏற்றுக்கொள்கிறேன் என்று ஏங்குகிறது. இந்த ஒரு எலெக்ட்ரான் பற்றாக்குறை ஓட்டை அல்லது hole  எனப்படுகிறது. வெளியே இருந்து மின் அழுத்தம் கொடுக்கப்படும் பொழுது, எலெக்ட்ரான் நகராமல் ஓட்டை நகர்கிறது. இப்படி நகரும் ஓட்டைகளைக் கொண்ட  மூலக்கூறு தான் P -டைப் செமிகண்டக்டர்.

நாம் காணும் மின்னணு சாதனங்கள் எல்லாம் இப்படி போதை ஏற்றப்பட்ட அரை குறை கடத்திகள் தான். இன்றைய உலகில் மின்னணு சாதனங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் அசாதாரணமானவை. எலெக்ட்ரான்களின் கடத்தலும் போதையும் குற்றத்திற்கு அப்பாற்பட்டவை!!

புதன், பிப்ரவரி 21, 2018

அணுவிலிருந்து அறிவியந்திரம் வரை - பகுதி 2: அணுக்களின் சோம்பேறித்தனம்!

நான் பணிபுரிந்த முதல் நிறுவனத்தின் மேலாளர் கூறிய பொன்மொழிகள், "ஓவ்வொரு மனிதனின் இறுதி இலக்கும் சோம்பேறியாய் இருப்பதே". வெகுநாள் இது ஒரு அபத்தம் என்றே நினைத்திருந்தேன், ஆனால் அணுக்களின் தன்மை என்னை யோசிக்க வைத்தது. ஆம் ஒவ்வொரு அணுக்களின் இலக்கும் சோம்பேறியாய் இருப்பதுதான். அணுக்களின் சோம்பேறித்தனத்தை குறித்து பார்க்கலாமா?

சென்ற பகுதியில் கூறுகளைப் பற்றி பார்த்தோம். இப்பகுதியில், கூறுகளை உருவாக்கி இருக்கும் அணுக்களைப்  பார்ப்போம். அணுக்களில் இருக்கும் மூன்றில் இரண்டு கூறுகளான நியூட்ரான்களும் ப்ரோட்டான்களும் அணுக்களின் மையப்பகுதியான அணுக்கருவில் (nucleus) இருக்கும். புதிதாக திருமணமான மனைவியை சுற்றி வரும் கணவனைப் போல, எலக்ட்ரான்கள் அணுக்கருவை எப்போதும் ஒரு வட்ட வடிவில் சுற்றிக்கொண்டே இருக்கும். முதல் சுற்றில் இரண்டு எலக்ட்ரான்களும் இரண்டாவது சுற்றில் எட்டு, மூன்றாவது சுற்றில் பதினெட்டு என்கிற கணக்கில் போய்க் கொண்டேயிருக்கும். எந்த வட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும் என்பது சூத்திரமாய், 2(n^2) என்பதாகும்.  

மேலே படத்தில் இருப்பது ஹீலியம் அணு. இதற்க்கு எல்லாமே இரண்டு தான், இரண்டு எலக்ட்ரான்கள், இரண்டு ப்ரோட்டான்கள், இரண்டு நியூட்ரான்கள்.

 இறுதிச் சுற்றில் சுற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எட்டாக இருக்கும் அணுக்கள் சோம்பேறியானவை. இந்த அணுக்கள் வேறு எந்த அணுக்களோடும் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குவதில்லை. எப்போதும் சும்மாவே ஒரு மந்த நிலையில் இருக்கும் வரம். உதாரணத்திற்கு நியான்னின் மொத்த எலெக்ட்ரான்கள் பத்து, உள் சுற்றில் இரண்டு, வெளி சுற்றில் எட்டு. மொத்தம் பத்து. வெளி சுற்றில் எட்டு இருப்பதனால், நியான் ஒரு மந்த வாயு(inert gas).

 எல்லா மனிதர்களும் சுறுசுறுப்பானவர்களைப் பார்த்து ஏங்குகிறார்கள். அவர்களைப் போல செயல்படத் துடிக்கிறார்கள். ஆனால் அணுக்களோ, சோம்பேறிகளைப் பார்த்து ஏங்குகின்றன சோம்பேறியாய் இருப்பதற்கு துடிக்கின்றன. என்ன செய்வது அவற்றுக்கு எல்லாம் இறுதிச் சுற்றில் எட்டு எலெக்ட்ரான்களுக்கு சில கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் பிரச்சினை. எப்படியாவது எட்டு எலெக்ட்ரான்களைப் பெற்று விடத் துடிக்கின்றன! இந்த சோம்பேறித்தனத்தை பல விதங்களில் அடைகின்றன.

இதற்கு இரண்டு பெரும்பான்மையான வழிகளைப் பின்பற்றுகின்றன. இது தொழில் செய்யும் முறை போல, உங்களிடம் இருக்கும் பொருட்கள் வேறு ஒருவருக்கு தேவைப்படும், அவரின் பணம் உங்களுக்குத் தேவைப்படும். அவரின் பணத்தைப் பெற்று உங்கள் பொருளைத் தருவது போலத்தான். உங்களின் இருவருக்கும் உள்ள இணைப்புதான் ஐயானிக் இணைப்பு. அது போலவே, என்னிடம் வெளிச்சுற்றில் பத்து எலெக்ட்ரான்கள் இருந்தால், இரண்டை, இரண்டு பற்றாமல் இருக்கும் அணுக்களுக்கு கொடுத்து விடுவது. உதாரணத்திற்கு நாம் பயன்படுத்தும் உப்பு, NaCl அல்லது சோடியம் க்ளோரைட். சோடியத்திற்கு வெளிச்சுற்றில் ஒன்பது எலெக்ட்ரான்கள் உள்ளது. க்ளோரைடுக்கு ஏழு.சோடியத்திற்கு ஒன்றை இழக்க வேண்டி இருக்கிறது. க்ளோரைட் ஒன்றைப் பெற வேண்டி இருக்கிறது. சோடியம் ஒன்றை க்ளோரைடுக்கு கொடுத்து, சோடியமும் க்ளோட்ரைடும் இணைந்து இணைந்து சோம்பேறியாகிவிட்டது.

அடுத்த வழி கோவலன்ட் பிணைப்பு, இது நண்பர்கள் போன்றது. ஒருவரிடம் இருசக்கர வாகனம் இருக்கும், மற்றவரிடம் எரிபொருள் போட காசு இருக்கும். இருவரும் பகிர்ந்து கொள்வது கோவலன்ட். உதாரணத்திற்கு ஆக்சிஜன் மூலக்கூறு. ஆக்சிஜன் அனுதானே, பிறகு எப்படி மூலக்கூறு? ஆக்சிஜனில் வெளிச்சுற்றில் இருப்பது 6 எலெக்ட்ரோன்கள். சோம்பேறியாக இரண்டு தேவை. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து, ஆளுக்கு இரண்டு எலக்ட்ரான்களை பகிர்ந்து சோம்பேறியாகின்றன. அதனால் தான், ஆக்சிஜன் எப்போதும் O2 ஆக இருக்கிறது.

மேலே இருப்பது தான் O2. ஆளுக்கு இரண்டு எலெக்ட்ரோன்கள்.

இப்போது உங்களுக்கான கேள்வி, கோவலன்ட் இணைப்பு வலுவானதா இல்லை ஐயானிக் இணைப்பு வலுவானதா? நண்பர்களுக்குள் இருக்கும் நட்பு நீண்டு இருந்தாலும், அணுக்கள் என்னமோ கொடுக்கல் வாங்கலையே விரும்புகிறது.

ஆனால் இதை சோம்பேறித்தனம் என்று சொல்வதை விட, அணுக்கள் சம நிலையை எய்த முயற்சிக்கின்றன என்று சொல்வதே சரி. மனிதனும் அதே போலத்தான், ஒரு சமநிலையைத் தான் பெரும்பாலும் தனது இலக்காக வைத்தது செயல்படுகிறான். அந்த சமநிலையை அடைந்தவுடன், அமைதியாகிறான் அல்லது சோம்பி விடுகிறான். அணுக்கள் உணர்த்தும் பாடம், நம் வாழ்வில் அடைய வேண்டிய பெரும் குறிக்கோளுக்கு உழைக்காமல் தடுப்பது சமநிலை என்னும் சோம்பேறித்தனமே!

அணுவிலிருந்து அறிவியந்திரம் வரை! - பகுதி 1 : மூலக்கூறுகள்!

நாம்  ஒரு நாளைக்கு பயன்படுத்தும் பத்து பொருட்க்களை சொல்லுங்கள் பார்க்கலாம்? தண்ணீர், காற்று, உடை, உணவு மற்றும் சில..  இந்தப் பொருட்களுக்கெல்லாம் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா? அந்த ஒற்றுமையை தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு குடிக்கும் தண்ணீரின் ஒரு தேக்கரண்டி எடுத்து, அதில் எவ்வ்ளவு குறைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு நீரை எடுங்கள். அந்த துளி நீரை மேலும் சிறுதுளியாக்கிக் கொண்டே வந்தால், இறுதியில் உங்களுக்கு எஞ்சி இருப்பது,கடைசித் துளியான நீர் மூலக்கூறு (molecule) மட்டுமே. இந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜனின் ஒரு அணுவும்(ஆட்டம்) ஹைட்ரஜனின்  இரண்டு அணுக்களாலும் ஆனது. இந்த ஹைட்ரஜனை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால், அதில் இருப்பது ஒரு எலக்ட்ரான், மற்றும் ஒரு புரோட்டான் ஆகும். அதற்கும் கீழே போஸான் கீஸான்  என்று செல்கிறது. நீங்கள் உபயோகப்படுத்தும் எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, அவை எல்லாம் அடிப்படைக் கூறுகளான எலெக்ட்ரான் மற்றும் புரோட்டான் கொண்டு உருவாகி இருக்கின்றன. எல்லாப் பொருட்களுமே இந்த இரண்டு அடிப்படைக் கூறுகளால் ஆனவைதான்.

எல்லாப் பொருட்களுமே இந்த இரண்டு அடிப்படைக் கூறுகளாக மட்டும் இருந்தாலும், பிறகு ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற அணுக்களுக்கான வித்தியாசம்தான் என்ன? ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் போன்ற அணுக்கள் வேறாக இருப்பதற்கு அவற்றில் இருக்கும் அடிப்படைக்கூறுகளின் எண்ணிக்கை வேறாக இருப்பது மட்டுமே காரணம். கார்பனுக்கு ஆறு எலெக்ட்ரான்கள், ஆக்சிஜனுக்கு எட்டு எலெக்ட்ரான்கள் என்று இந்த எண்ணிக்கை மாறுபடுவதை தவிர வேறு எதுவும் இல்லை.  ஆக்சிஜனுக்கும் கார்பனுக்கும் உள்ள வித்தியாசம் இரண்டு எலெக்ட்ரான்கள் மட்டுமே. ஆனால் இரண்டு எலெக்ட்ரான்கள் அதிகமாக இருக்கும் கார்பனை சுவாசித்தால் ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்து விடும்.

இந்த அணுக்கள் பெரும்பாலும் தனித்து இருப்பதில்லை, பல அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளாக இருக்கின்றன. இந்த வெவ்வேறு அணுக்கள் வெவ்வேறாக இணையும் பொழுது, வெவ்வேறு மூலக்கூறுகள் கிடைக்கிறது. ஒரே மாதிரி மூலக்கூறுகள் ஒருங்கிணைந்து நீங்கள் பயன்படுத்தும் நீராகவும், உணவாகவும், உடையாகவும், காட்சியளிக்கின்றன!!


மேலே இருக்கும் படத்தில் இருப்பதுதான் நீரின் கடைசித் துளி. இதற்க்கு மேல் நீங்கள் நீரை பிரிக்கவே முடியாது. நீங்கள் கடைசியாக பிரிக்க முடியாத இந்த நீர்த்துளிதான், நீரின் மூலக்கூறான H2O. நீரின் கடைசித்துளியில் இருப்பது  ஒரு ஆக்சிஜன் மற்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களே. ஒரு துளி நீரில் இதுபோன்ற எத்தனை மூலக்கூறுகள் இருக்கும்? உங்களுக்காக ஒரு கணக்கு, ஒரு துளி நீரை பத்தாயிரம் கோடியாகப் பிரித்தால், அதில் பதினாறாயிரம் கோடி மூலக்கூறுகள் இருக்கும். அப்படியானால் ஒரு துளியில் எத்தனை நீர் மூலக்கூறுகள்?

இப்படி நாம் காணும் எல்லாப் பொருட்களுமே மூலக்கூறுகளால் ஆனதுதான்.

இம்மாதிரி பலவாறான மூலக்கூறுகள் இணைந்துதான், மனிதர்களாய் காட்சி தருகிறது. கூறுகளாய் இருக்கும் மனிதர்களை கூறுகெட்டவர்கள் என்று இனம் பிறக்கும் மூளையும் மூலக்கூறுகளால் ஆனதே!!

பிகு: அடிப்படிக் கூறுகள் மொத்தம் மூன்று, எலெக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான். ஹைட்ரஜன்க்கு நியூட்ரான் இல்லை. கட்டுரை எளிமைக்காக இரண்டு மூலக்கூறுகள் எனக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல, அணுக்களின் வேற்றுமை எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லை. ப்ரோட்டான் மற்றும் நியூட்ரோன்களின் எண்ணிக்கையிலும் உள்ளது.

வெள்ளி, மார்ச் 23, 2012

நயாகரா!!!

நயாகரா!!!

திருமணம் ஆன முதல் வருடம், நாங்கள் மிச்சிகன் மாகணத்தில் இருந்தோம். எனது மனைவியின் முதல் பிறந்தநாளுக்கு முந்திய நாள்,எதாவது ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என்று, அலுவலகத்தில் இருக்கும்பொழுது நயாகரா செல்லலாமா என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. தங்கும் விடுதிகளுக்கான முன்னேர்ப்பாடுகளை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். மிகவும் சாதரணமாக, கலமசு என்கிற நகரத்திற்கு சென்று ஒருநாள் தங்கிவிட்டுவரலாம் என்று கூறினேன். ஒரு நாள் தங்குவதற்கான தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு வண்டியை கிளப்பினோம். கலமசு நகரம் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்னரை மணி நேரப் பயணத்தில் இருந்தது. சுமார் ஐந்து மணி நேரம் சென்று இருப்போம், என் மனைவி, இத்தனை தூரமா செல்ல வேண்டும் என்று கூறி, GPSஇல் பார்க்க, இது நயாகரா பக்கம் செல்கிறது என்று கண் விளித்து கேட்டாள். நானும் மிகவும் அமைதியாக, தெரியவில்லையே என்றேன். உடனே கண்டுகொண்டு நயாகரா தானே செல்கிறோம் என்றாள். இது ஒரு மிக அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு காரின் எரிபொருள் குறைவாக இருந்ததால், ஒரு பண்ணிரண்டு மணியளவில் ஒரு காஸ் ஸ்டேஷன் சென்று எரிபொருள் நிரப்பினோம். என் மனைவி காபி வாங்குவதற்காக, அருகில் இருந்த கடைக்கு சென்றாள், காரின் பின் சீட்டில் இருந்த கேக்கை எடுத்து மெழுகுவர்த்தி கொளுத்தி தயாராக இருந்தேன். பிறகென்ன, பிறந்த நாள் வாழ்த்து பாடினோம், சில ஆனந்த கண்ணீர், அடுத்து பிறந்த நாளுக்கும் ஏதாவது செய்யவேண்டுமே என்ற என்னுடயை கவலை, இதை எல்லாம் தாண்டி தாங்கும் விடுதியை அடைந்தோம்.

காலை ஒரு எட்டு மணிக்கு எழுந்து, நயாகரா சென்றோம், ஒரு மண்ணும் புரியவில்லை என்பார்களே, அப்படித்தான் இருந்தது! அருகில் இருந்த சுற்றுலாத்தல மையத்திற்கு சென்றோம், டூர் வண்டி இருக்கிறது என்றார்கள். டிக்கெட் வாங்கினோம், ஏறி அமர்ந்தோம். ஓட்டுனர், நயாகராவில் எப்படி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது முதல், அதன் பல்லாயிரக்கனக்கான வருட வரலாறு போன்ற மொக்கைகளை வழங்கினார். இப்படி ஒரு இரண்டு மணி நேரம், "எப்படா இண்ட்ரவல் விடுவீங்க" என்றிருந்தது. அடுத்ததாக maid of the mist என்றார்.

வேணாம்! வலிக்குது!, என்று வடிவேலு கதையாக நான் கதறினாலும், காசு கொடுத்தாகி விட்டதே என்று சென்றேன். ஒரு படகில் ஏற்ற ஒரு லிப்டுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு ஆறு மாடி உயரத்திற்கு கீழே சென்றோம். படகில் ஏற ஒரு பெருங்கூட்டம் காத்திருந்தது. ஏறிக்கொண்டோம்! பேருந்திலேயே ஓட்டுனருக்கு அருகில் தான் வருவேன் என்று அடம் பிடிப்பேன், இங்கு கேற்கவா வேண்டும், படகின் நுனியில் நின்று கொண்டேன். நயகாரா அருவி விழுந்து கொண்டு இருப்பது கண்களில் தெரிந்தது! பிரமாண்டம் என்பது மிக சிறிய வார்த்தை. அருவி விழுகின்ற காட்சியும், நூறடி உயரத்தில் இருந்து விழுவதால் எழுகின்ற நீர் துவளைகளின் மூடமும், அதனால் எழுகின்ற ஒலியும், மனம் உள் வாங்கிக்கொள்வதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாய் இருந்தது. படகு நீர் வீழ்ச்சியை நோக்கி, நெருங்கிக் கொண்டு இருந்தது. அதிர்ச்சி, பிரமிப்பு, இன்னும் பல உணர்வுகள், ஐந்தாயிரம் வருடங்களைத் தாண்டி வாழும் தமிழுக்கு வார்த்தைகள் போதவில்லை. குதிரை லாட வடிவில் இருந்த அருவியின் மையத்தில் இருந்தோம். எதையும் சிந்திக்காமல், இன்பத்தில் மூழ்கி இருப்பது தான் தியானம் என்கிறார்கள், படகு அங்கிருந்து கிளம்பி வந்த வெகு நேரம் கழித்தே எனக்கு தோன்றியது. பிறகு பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

பிறகு cave of winds என்கிற இடத்திற்கு சென்றோம். அதே போல ஆறு மாடி லிப்ட் பயணம். நயாகரா அருவி, இரண்டு அருவிகளாக விழுகிறது, உண்மையில் மூன்றாக விழுகிறது, மூன்றாவது மிகச் சிறயதாக இருப்பதால், இரண்டு என்று மட்டுமே குறிப்பிடுகிறோம். முதலில் சென்றது, ஒரு அருவி, இப்போது இரண்டாவது அருவி. ஆறு மாடி கீழே சென்றவுடன், மலையில் குடைந்த பொந்து போன்ற ஒரு வழியில் நடந்து சென்று, வெளிப்புறத்தை அடைந்தால், ஒரு 100 அடி தூரத்தில் இரண்டாவது அருவி. ஒரு 1000 அடி அகலத்திற்கு, 150 அடி உயரத்தில் இருந்து நீர் விழுகிறது, அது விழும் வேகமும், அடிக்கும் வேகமும், நம்மை பயமுறுத்துகின்றன. ஒரு மரத்திலேயே ஏணி போன்ற ஒரு கட்டமைப்பை வைத்திருக்கிறார்கள். அதில் ஏறிச்சென்றால், மொத்த அருவியும் நம் மீது விழுவது போன்ற ஒரு உணர்வு! இன்பம் மனதை அள்ளுகிறது. வெளிய வர மனம் இல்லாமல் வெளியே வந்தோம்.

பிறகென்ன, நேரே வீட்டுக்கு வண்டியை கிளப்பினோம். இரவு ஒரு மூன்று மணி இருக்கும், வீடு வந்து சேர்ந்தோம். சில வாரங்கள், பக்கத்துக்கு வீட்டுப் பெண்களும், சொந்தக்காரப் பெண்களும், நள்ளிரவில் கேக் வெட்டியது பற்றி பேசி என்னை ஒரு ஹீரோ ஆக்கினார்கள்! சில மாதங்களில் எல்லாரும் மறந்து போனார்கள்! இது வரை நாலைந்து முறை, நயாகரா சென்று வந்து விட்டோம், முதல் முறை போல் இருந்ததா என்றால், பதிலை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!










பி.கு: பயணத்தை சொன்னாலும், சில தகவல்களையும் சொல்ல விழைகிறேன். நயாகரா அருவி நகர்ந்து கொண்டே செல்கிறது. சில வருடங்களில் 1.4 மீட்டர் வரை நகர்ந்திருக்கிறது. உலகிலேயே மிக பெரிய மின்சார உற்பத்தி நிலையம் இதுதான். இது ஒரு ஆறு இல்லை, ஒரு ஏரியில் இருந்து தண்ணீர் நிரம்பி மற்றொரு ஏரியில் விழுவதே நயாகரா. ஆனாலும் அதற்கு பெயர் நயாகரா ஆறு தான். நயாகராவின் பெயர் அமெரிக்க ஆதிவாசிகளின் மொழியில், பயங்கரமான சத்தத்தோடு விழுவது என்று பொருள். அந்த தண்ணீர் உற்பத்தி ஆவது, கடைசி பனி காலத்தில் உருவாகிய பனி பாறைகளின் நீர். இது போன்ற பல மொக்கைகளை இரண்டு மணி நேரம் கேட்டோம்.

செவ்வாய், அக்டோபர் 11, 2011

இலையுதிர் காலம்!!!

பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதால், நம் தமிழகம் மாபெரும் தட்பவெட்ப மாறுதலை சந்திப்பதில்லை. ஆகவே இலை உதிர் காலம் என்பது, இலைகள் வறண்டு உதிரும் காலம் மட்டுமே. வட துருவத்தை நோக்கியோ அல்லது தென் துருவத்தை நோக்கியோ செல்லும்பொழுது, தட்பவெட்ப மாற்றம் அசாதரணமாக உள்ளது. உதாரணமாக, டெல்லியில் கொடுங்கோடையும், கடுங்குளிரும் இருக்கும். கோடை காலத்தில் இருந்து குளிர் காலத்திற்கு மாறும், நாட்களே இலையுதிர் காலமாக கருதப்படுகிறது. கடும் வெயிலில் வாழ்வதற்கு இருக்கும் இலைகள், இலையுதிர் காலத்தில் வெட்பம் குறையும் போது, தங்கள் நிறத்தை சிவப்பாகவும், பிறகு மஞ்சளாகவும் மாற்றி, இறுதியில் உதிர்கின்றன. இந்த இலைகளின் நிற மாற்றம், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை பார்ப்பதற்கு எப்போதும் ஒரு கூட்டம் படை எடுக்கும். நியூ கம்சையர் என்ற மாநிலத்தில் இந்த நிற மாற்றம் அபிரிதமாக இருக்கும். அங்கே வெள்ளை மலை என்று ஒரு குறிஞ்சி நிலப்பரப்பு உள்ளது, அது சுமார் எண்பதாயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது.

நேற்றுதான் இந்த வெள்ளை மலையில் இருந்து வந்தோம். திங்கட்க்கிழமை கொலம்பஸ் தினம் என்பதால், மூன்று நாட்களுக்கு முன்பு, இங்கே செல்வதற்கு திட்டம் தீட்டினோம். அன்று இரவே ஒரு தாங்கும் விடுதியை இணையத்தில் முன் பதிவு செய்தோம். மறு நாள் ஒரு நான்கு சக்கர சிற்றுந்தை(car) வாடகைக்கு பதிவு செய்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து, இந்த இடம் சுமார் 400 மைல்கள் இருக்கும். 400 மைல்கள் சொந்த வண்டியில் செல்வதை விட வாடகை வண்டி சிக்கனம் என்பதால், அந்த முடிவு! வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து வந்த உடனேயே, வெள்ளை மலையில் எங்கே நிறம் மாறியிருக்கிறது என்று இணையத்தில் ஆய்வு செய்தேன். ஐந்து நாட்களக்கு முன்பு பதிவு செய்ப்பட்ட மாற்றம் என்பதால், அதன் நம்பகத்தன்மை சற்றே கேள்விக்குரியதாக இருந்தாலும், நம்பினேன்! அதில் இருந்த பதிவு, "நியூ கம்சயிரின், வடக்கே மட்டுமே நிறம் மாறியுள்ளது", என்பதே! ஆகவே முதலில் வடக்கு நியூ கம்சையர் செல்லத் திட்டமிட்டோம்.

நான்கு மணிக்கு செல்லத் திட்டமிட்டு, ஆறு மணிக்கு கிளம்பினோம். நேரே ஒரு எரிபொருள் நிரப்பும் இடத்தில், பெற்றோலை நிரப்பிக்கொண்டு, சென்றோம். நம் நாட்டைப்போலவே, இங்கேயும் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைக்கும் ஒரு எண் உள்ளது. முதலில், 287 தேசிய நெடுஞ்சாலையில் சென்று, பிறகு 95ல் சென்று நியூ யார்க் மாநிலத்தை கடந்தோம். பிறகு அதே 95ல் கனக்டிக்கட்டை அடைந்தோம். அங்கே ஒரு ஓய்வெடுக்கும் இடத்தில் நிறுத்தி, என் மனைவியிடம் வண்டியை ஒப்படைத்தேன். எனக்கான ஒரு நம்பிக்கை, ஓட்டுனரின் அருகில் அமர்ந்து தூங்கினால், ஓட்டுனருக்கும் தூக்கம் வரும் என்பது. ஆகவே, அமர்ந்தவுடன் நான் ஓட்டுனரிடம் சொல்வ்வது, "தூக்கம் வந்தால், என்னை எழுப்புங்கள்" என்பதே! அதாவது நான் தூங்கப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்வது. அதையே என் மனைவியிடமும் சொல்லிவிட்டு, ஆழ்ந்த நித்திரைக்கு சென்றேன். நெடுஞ்சாலையில் என் மனைவி ஓட்டுவது அதுவே முதல் முறை என்ற பயம் சற்றே இருந்தாலும், உறக்கம் முக்கியம் என்பதால், கண் அயர்ந்தேன். நான் கண் விழித்த போது, மசாசுசத்ஸ் மாநிலத்தை தாண்டி, வெர்மொண்டில் இருந்தோம். அது சனிக்கிழமை காலை என்பதால், எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் அலைப்பேசியில் அழைத்து மொக்கை போட்டுக்கொண்டிருந்தேன். பிறகு ஓர் இடத்தில் இருந்து, எரிபொருள் நிரப்பி, நான் ஓட்டத் துவங்கினேன்.

மனமெல்லாம் அந்த நிறங்களை கற்பனை செய்துகொண்டு இருந்தது. சீரிய வேகத்தில், நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் வட பகுதிக்கு சென்றுவிட்டோம். ஆனால்! நிறங்கள் மட்டுமல்ல, இலைகளையே காணவில்லை. என்னடா இது! என்ற ஒரு வெறுப்பில், எங்கேனும் ஒரு இலையைக் கண்டால், அதை புகைப்படமாக தொலைபேசியில் பதிவு செய்தோம். சப்வே என்று ஒரு இடத்தில் சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு, நிறங்கள் எல்லாம் எங்கே, என்று விரக்தியில் அங்கே பணிபுரியும் ஒருவரிடம் கேட்டோம். அவரோ, நிறமெல்லாம் இங்கே வந்து சென்று விட்டது, தெற்கே, 16 ஆம் சாலையில் செல்லுங்கள் என்றார். நாங்கள் தங்கும் இடத்திற்கும், அதே சாலை தான் என்பதால், சற்றே மனதை தேற்றிக்கொண்டு சென்றோம்.

முதலில் இலேசாக, மஞ்சள் நிறம் தெரிந்தது, உடனே ஒரு புகைப்படம். பிறகு செல்லச் செல்ல மஞ்சளும், பச்சையும் மாறி மாறி வந்து மனதை அள்ளியது. ஒரு வழியாக தங்கும் விடுதியை அடைந்தோம். அங்கே வாசிங்டன் மலை என்று ஒரு மலை உச்சி உள்ளது. இந்த மலை உச்சிக்கு வாகனத்தை செலுத்துவது என்பது ஒரு திகிலான அனுபவம். முன்பே கூகுளில், அது குறித்து தெரிந்து கொண்டேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது, ஒரு 10 செமீ தவறினால், வாகனம் பாதாளத்தில் என்பது! என்னைக்கோ உயரம் பற்றிய ஒரு பயம் இருந்தது. அதுவே அந்த பயத்தை உடைக்க நல்ல சந்தர்ப்பம் என்று முடிவெடுத்து, என் மனைவியிடம், அதில் உள்ள பயத்தை சொல்லாமல், "நாளை காலை வாசிங்டன் மலை முகட்டுக்கு செல்லலாம்" என்றேன்.

காலை எட்டு மணிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, வழக்கம்போல ஒம்பதரை மணிக்கு மலை உச்சிக்கு செல்லும் வழியை அடைந்தோம்! மலை அடிவாரத்தில் இருந்த போது, என் மனம் வேகமாக துடித்தது. எல்லாவற்றையும் கற்பனை செய்துகொண்டேன். "பாதுகாப்பாக சென்று வருவேன்", ஒரு ஐம்பது முறை மெதுவாக முனுமுனுத்துக்கொண்டேன். சிற்றுந்தில் முதல் கியரில் செல்லச் சொல்லி அனுப்பினார்கள். ஏலு மைலும் முதல் கியர்தான்! அந்த பாதை சற்று செங்குத்தாக ஏறியது, பிறகு மஞ்சள் நிறங்களில் மரங்கள், அடடா இங்கு வராமல் இருந்தால் இதையெல்லாம் பார்க்காமல் இருந்திருப்பேனே என்ற மகழ்ச்சியிலும், இதற்குத்தான் இப்படி பயந்தார்களா என்றும் வியந்தேன். அந்த நிறம் மாறிய மரங்களைத் தாண்டி, பைன் மரங்களைக் கடந்தோம். சாலை சற்றே நெடுகல் ஆனது, உயரம் சற்றே அதிகம் ஆனது, என் கிலியும்தான். சாலையும் சற்றே செங்குத்தானது. எதிரே வாகனங்கள் வரும் பொழுது, நான் என் வண்டியை அப்படியே நிறுத்திக்கொண்டேன். பாதையின் பக்கங்களில் ஒரு தடுப்பு சுவரோ, ஒரு கம்பியோ கூட இல்லை. அரை அடிக்கும் குறைவாக நகர்ந்தால், தொடங்கிய இடத்தை அடைந்து விடுவோம். இடையே ஒரு அரை மையிலுக்கு, வெறும் மண் சாலை. அந்த மண் சாலையை கடந்த உடனே, உச்சியை அடைந்தோம். என் மனம் சொல்லவொண்ணா ஒரு குதூகலத்தை அடைந்தது. எதையோ அடைந்தது போல், ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. உயரம் குறித்த என் அச்சம் தகர்த்து!


இந்த பாதையில் எதிரே ஒரு வண்டி வந்தால் எப்படி இருக்கும்.அந்த மண் சாலையை பதிவு செய்ய தவறிவிட்டோம். அநேகமாக நாங்கள் உறைந்து போயிருக்க வேண்டும்!




கீழே வரும்போது, எந்த பயமும் இல்லாமல் வந்தேன். இரண்டு, மூன்று இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் மனம், மகிழ்ச்சியில் கரைபுரண்டது. அங்கே இருந்த நிறங்கள் எல்லாம், அற்புதமாக இருந்தாலும், என் மனம் அந்த மலை உச்சியையே நினைத்துக்கொண்டு இருந்தது. எங்கள் வாகனத்தில் ஒட்டுவதற்கு, "இந்த வாகனம், வாசிங்டன் மலையை உச்சியை அடைந்தது" என்ற பசை தரித்த அட்டையைக் கொடுத்தார்கள்.

பிறகு புகைப்படங்கள்! முன்பெல்லாம் ஒரு பத்தடிக்கு இருக்கும், ராட்டன் தூரிகளை பார்த்தாலே, கண்கள் சுழற்றும். அன்று 500 அடி மலை உயரத்தில் இருந்து, ஒரு மிகப்பெரிய வளைந்து நெளிந்த சறுக்கு மரத்தில் சறுக்கி, என் மனைவியை அசத்தினேன். என் மனைவி வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டாள். பிறகு அன்றைய தினம் முடிந்த போது, மறு நாள் நிறங்களைப் பார்க்க எங்கே போகலாம் என்று கேட்டேன். அந்த விடுதியில் இருந்தவர், சாலை 112 செல்லுங்கள் என்றார்.

மறுநாள் காலை, 112 ஐ நோக்கி சென்றோம். இந்த சாலை, நாங்கள் இருந்ததில் இருந்து, சற்று தெற்கே, கிழக்கு மேற்காக ஓடுகின்றது. 112 ண் ஆரம்பத்தை அடைந்தோம். சிறிது தூரத்திலேயே, நிறங்கள் தென்பட்டன. சாலை எங்கும், பச்சையும், சிகப்பும், மஞ்சளும் கொட்டிக் கிடந்தது. இந்த சாலை, ஒரு சிறு ஓடையை ஒட்டியே சென்றது. கண்கள் நிரம்பவில்லை என்று புகைப்படம் எடுத்தோம். இயற்கை சொல்லுவதில், கோடியில் ஒன்று கூட புகைப்படம் சொல்வதில்லை என்பதை உணர்ந்தோம்.







ப்ஃலும் சார்ச் என்ற இடத்திற்கு வந்து ஒரு இரு புகைபடம் எடுத்துக்கொண்டு , எங்கள் வீட்டை நோக்கி ஓட்டினோம். சுமார் எட்டு மணி நேரம், வீட்டை அடைந்தோம். சுமார் அறுபது மணி நேரத்தில் 1050 மையில்கள் ஒட்டியிருந்தோம். வாசிங்டன் மலை உச்சியும், அந்த உச்சியில் இருந்த "6288 அடி" என்ற பலகையும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.

https://picasaweb.google.com/hiplanet/zEvLWF#

புதன், ஜூன் 11, 2008

It all started from the day, Subi and i were driving from Edison, NJ to virginia. Two months from now, then we decided to plan for a trip for every three months to a new place. The first on our choice was the place to gain or lose most of your money, the Las Vegas of east, Atlantic City!

Then for another two months, we were just talking about the proposed trip to atlantic city. Finally the long weekend on May had come, and the time to Atlantic city too came! I booked a car thru enterprise. Saturday morning Subi, came from Baltimore to my house. By the time, he came to my home; I was still standing in the enterprise queue. Oh man! Long weekend mania drove everybody to the rental cars queue. The logo of the car somehow appeared to me like a puking lion. Guys, believe me, i felt omen is not good as the logo was like someone puking! Till then, i never believed in omens! I went and stood on the four corner road, adjacent to the signal post. And Subu was walking towards me in a blue shirt. I was waving my hands. After his brief non-response, i called him to wave me back. He responded back, that he too can see somebody walking in a blue shirt! Shit!, i was waving to a lady. To my surprise, when she came near to me, she smiled at me! How generous the women are here? Subu came and the first thing he asked me was, what was the car? I said, "the logo is looking like a puking lion". He said, it is dodge! Will tell you, why they had a puking lion as a logo! I adamantly said, only i'll drive. I put the car in reverse gear pressed the gas, it gave a jerk. I was stricken with panic, and pressed the brake, another jerk. Believe me, the brake and the gas pedals were so sensitive, even for the slightest touch gave the hardest jerk. I parked the car back, and requested him to drive for some time. He took the car, this time same jerk! We then concluded the car was in pathetic condition! If we apply the brake we felt the two wheels were running away from us!

So we decided to change the car, but that rental centre had all the cars sold out! So we decided to go to Dulles airport to change the car. In the meantime, one of my roommate(to curse him, we need a seperate blog!), wanted to collect his chappathis. We drove for him! The answer at Dulles Airport was, "We are sold out!". I thought baltimore was on the way, and i called the baltimore airport, got same answer, "We are sold out"! Cursing me, Subu plugged the GPS! Wow, GPS plug was not working!

If it was in india, i would not mind, all that we have to do is, park the car on the side way and to some stranger "anna, how to go to xyz?" or "akka, how to go to xyz?". Here, a lady is called as "Anna"(there is confusion in that too, somebody says, she is a model and somebody says, she is a tennis player), then i got confused, if a lady is anna, then how to call a man? "akka"? Owing to the confusion, i stopped asking route from strangers' long back! So, how to get the direction now, GPS was not working, can't ask anybody. There comes a handy stuff! My iphone! Yes man, i have the most coolest and fancy thing on the planet called iphone! And the coolest feature on iphone is, gmaps. I gave the address, it gave the direction!

Then Subbu started driving. I assumed the role of the manager, giving only directions! We started from the Dulles airport. I was telling to Subi, take left, take right, take exit 13a and all the crap, whatever told by iphone. We reached the first toll gate, paid 3$. Then we drove to a rest area, to wipe out the unrest in the filled bladder. Then, a tunnel toll 2$, then the baltimore bridge toll, 2.4$. Then NJ turnpike, ticket was collected.

Then another exit for coffee. Then we drove towards Ramada hotel. In the way we were made to pay 13$ for toll. We took bath and changed the dress. I was wearing a round neck blue T-Shirt, with a black jean and sneakers. Guess, what Subi was wearing? A full hand black Shirt, jean and a black formals shoe. Our guy's plan was to visit a dance floor and dance with a pretty girl! He is a man of preparation! And needed to be admired. Now the car was driven straight to Atlantic City, thru the express highway, where there was a heavy traffic! In the mean time the toll of 6.5$ was paid and another rest area. Then we reached taj mahal!, the famous casino. I really got the feeling of dharma, elder brother of pandava. Oh man, i'm going to roll the dice over all the hard earned money! I was excited. I took out a five dollar bill and played for two hours. Finally i came out loosing that five dollar bill. I guess, Subi might be more excited, he took few hundred dollars(the amount can't be disclosed) and he too came out with the empty hands. We came out of taj mahal, and we took an oath that we master in those games and buy the whole casino by playing the games, we lost! One of my friends later told me that, those casinos make money, by the people who make the oath of those kinds!

I wanted to go back to hotel and take some rest. But our dance master was adamant to dance in the dance floor. Then we strolled on the board walk from one end to another end for at least 6 times in spending 3 hours. Finally, at last, it was 9'o clock. Then we rushed to a dance floor. Subi threatened me, that i may not be allowed in the dance floor with sneakers! I was really unsure, what I have to do even if they let me inside the dance floor (you know my dancing skills :-)). This guy, anyway going to enjoy and i'm going to stare at everything like a stranger. But fortunately, as soon as we entered, Subi was also staring at everything like a stranger. We are exactly doing the same thing, the only difference was, i was wearing t-shirt and sneakers, he was in formals! (I'm sorry Subi, i let you down, after admiring you before). I was feeling suffocated. He doesn't know what to do. We came out, and took second oath of the day, "one day in the same dance floor, every girl should be desperate to dance with us!".

Ok, it is the time for dinner. We went to a pizza hut. Subi ordered a chicken pizza. We had our stomach full. Then again our favorite activity of strolling the board walk began. Now, we didn't walk for six times, but once. Then we came to the parking lot, to take the car out. We forgot where we parked the car. The parking lot of taj must hold at least thousand cars. If each car is a width of 3 meters with parking lot, we have to walk three kilometers to the worst case. But thankfully, we remembered a dirty place, where we got down. We found the dirty place, Subu pressed the unlock key in the autocop to find the car. Wow man! that too was not working!
Now, it is the time, to drive back hotel. We were driving back to our hotel, somewhere in the express highway, we missed an exit. And we drove a point, where there was no cell tower. In order to get further direction from iphone, we need tower. So to get the tower, we drove further in the wrong direction! Finally we got the tower, direction and hotel!

Next day morning (after noon) we woke up. We decided to take lunch in the hotel itself. Wow, omlet was there in the menu. I hurriedly ordered an omlet. He followed. In the mean time, i called one of my friends over the phone,, who was visiting Niagara falls then. He was in full excitment! He said, "Raaaaj, it is amazing maaan! Water is flowing from the top!" This really amused me, in falls, if not water shouldn't fall from the top, then where should it be falling from? Ok, high genius stuff! let us come back to the trip. Finally omlet came, smashed potato was there, fried tomato and onion were there and everything was there, other than the eggggggg! Again not sure, whether i should call the waitress as akka or anna, so i pushed that hell stuff into my mouth. Again drove back to atlantic city to do our favorite job of walking on board. The street is completely made up of wooden boards. And this street is called as board walk.

Finally around 5'o clock we decided to drive back to my home!

Few learning's about the trip,
1. we paid for the toll around 40$ for five hours drive, it is nothing but paying 1600 for the road to travel from coimbatore to salem!
2. My investment for iphone, was finally a right decision.
3. Your dressing doesn't matter to dance with a pretty girl.
4. It was not puking lion, but a deer with big horns. It just looked like, lion kneeling down and vomiting.
5. Fun and Joy can't stop flowing, if we stop complaining. We never complained, we enjoyed it!

And a very important learning was, you can always call a man as a Gentleman, and a lady as a madam. If you are still confused whether the person is a man or woman, you can say, "Excuse me!"